ஆறு படத்தில் நடித்த காமெடி நடிகர் திடீர் மரணம்! சோகத்தில் திரைத்துறையினர்!

கடந்த சில நாட்களாகவே சினிமா பிரபலங்கள் இறந்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் மனோ கார் விபத்தில் காலமானார். இந்நிலையில் தற்போது ஆறு படத்தில் நடித்த காமெடி நடிகர் ஜெயச்சந்திரன் திடீரென இறந்துள்ளார்.
இதனால் திரைத்துறையினர் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர். மேலும் ஆறு படத்தில் வைகை புயலின் தக்காளி சட்னி காமெடி யாராலும் மறக்க முடியாது. அதில் ஒருவரிடம் நடிகர் வடிவேலு அவர்கள் என்ன இது கழுத்தில் ரத்தம் என கேட்பார்.
அதற்கு அவர் நான் தண்டவாளத்தில் தூங்கி விட்டேன். அப்போது 4,5 இரயில்கள் தன் கழுத்தில் ஏறி சென்றதாக கூறுவார் அவர் தான் ஜெயச்சந்திரன். இவர் இன்று காலை அவரது வீட்டு பாத்ரூமிற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது மயங்கி விழுந்துள்ளார்.
உடனே அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது பாதி வழியிலேயே உயிர் இழந்துள்ளார். இதனால் திரையுலகத்தினர் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர்.