படப்பிடிப்பில் போதையில் இருந்த பிரபல நடிகை!. வெளிவரும் பல உண்மைகள்!. இதெல்லாம் கூடவா செய்வாங்க?.

படப்பிடிப்பில் போதையில் இருந்த பிரபல நடிகை!. வெளிவரும் பல உண்மைகள்!. இதெல்லாம் கூடவா செய்வாங்க?.



famous actress in drunk in cinema shoot


சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லைகளை நடிகைகள் உரக்க பேச ஆரம்பித்து உள்ளனர். படுக்கைக்கு அழைத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை வெளியிட்டு ஸ்ரீரெட்டி திரையுலகை கதிகலங்க வைத்தார்.

இப்போது தனுஸ்ரீதத்தாவும் பாலியல் ஆசாமிகளுக்கு எதிராக குரல் எழுப்பினார். இவர் தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் கதாநாயகியாக நடித்தவர். தேசிய விருதுகள் பெற்ற பிரபல இந்தி நடிகர் நானா படேகர் படப்பிடிப்பில் பாலியல் தொல்லை கொடுத்ததாக தனுஸ்ரீ புகார் கூறினார். 

தற்போது இந்தி டைரக்டர் விவேக் அக்னிகோத்ரி மீதும் தனுஸ்ரீத்தா புகார் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் படப்பிடிப்பில் இர்பான் கான் நடித்த காட்சி படமாகிக் கொண்டு இருந்தது. எனக்கும் அந்த காட்சிக்கும் தொடர்பு இல்லை. ஆனால் டைரக்டர் என்னிடம் வந்து இர்பான்கானுக்கு நன்றாக நடிப்பு வர வேண்டும். இதற்காக உனது ஆடைகளை களைந்து விட்டு அவர் முன்னால் போய் நில்லு என்றார். 

actress dhanusri

இந்த நிலையில் நடிகை தனுஸ்ரீதத்தாவை விமர்சித்து நடிகை ராக்கி சாவந்த் கூறுகையில், தனுஸ்ரீ குற்றம்சாட்டும் அந்த தேதியில் நானும் படப்பிடிப்பில் இருந்தேன். என்னிடம் ஒரு பாடலுக்கு ஆடவேண்டும் என்று நானா படேகர் கேட்டுக்கொண்டார்.

அவர் கூறியதற்கு நானும் சம்மதித்தேன். அப்போது தனுஸ்ரீதத்தா நீண்ட நேரமாக போதையில் சுயநினைவு இல்லாமல் இருப்பதாக கூறினார்கள். அவருக்கு பதிலாகத்தான் என்னை ஆட அழைத்து இருந்தார்கள்.

 தனுஸ்ரீ அதிக போதையில் மயக்கத்தில் இருந்தார். அவரைப்பற்றி கவலைப்படாதே நீ நடித்துக்கொடு என்று நானா படேகர் என்னிடம் கூறினார். நான் நடித்து கொடுத்தேன்” என்று அவர் கூறினார்.