"சமந்தாவுக்கே இந்த நிலை தான்!" பிரபல பெண் டான்சர் கண்ணீர் பேட்டி!



Dancer rhema viral interview

சின்னத்திரையில் சீரியல் நடிகையாக இருப்பவர் ரேமா அசோக். மேலும் இவர் டான்சராகவும், மேக்கப் ஆர்ட்டிஸ்டாகவும், டப்ஸ்மாஷ் பிரபலமாகவும் உள்ளார். இவர் "களத்து வீடு" என்ற தொலைக்காட்சி தொடரில் தான் முதலில் அறிமுகமானார்.

samantha

மேலும் இவர் விஜய் டிவியில் "சின்னத்தம்பி" சீரியலிலும், ஜீ தமிழின் "ரெக்கை கட்டி பறக்குது மனசு" சீரியலிலும் நடித்துள்ளார். ஆரம்ப காலங்களில் நடனக் கலைஞராக இவர் பல இடங்களுக்கும் சென்று கோவில் நிகழ்ச்சிகளில் கூட நடனம் ஆடியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறினார், " நடனம் ஆட அழைப்பவர்கள், பெண் நடனக் கலைஞர்களுக்கு துளியும் மரியாதை தர மாட்டார்கள். மேலும் தங்கும் இடம், உணவு கூடத் தர மாட்டார்கள்.

samantha

ஐட்டம் பாடல்களை பாடுபவர்களைப் புகழ்ந்து பேசுபவர்கள், அந்தப் பாடலுக்கு ஆடும் நடிகைகளை மட்டும் தரக்குறைவாகப் பேசுகிறார்கள். சமந்தாவுக்கே இந்த நிலைதான். அப்படியிருக்க எங்களைப் போன்ற சாதாரண நடனக் கலைஞர்களின் நிலை எப்படி இருக்கும்?" என்று ரேமா அசோக் கண்ணீருடன் கூறியுள்ளார்.