சி.எஸ்.கே தோற்றாலும் இவங்க பேமஸ் ஆயிட்டாங்க!! வைரலாகும் நடிகையின் கியூட் ரியாக்சன்..
கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த எஸ்.பி.பியின் உடல்நிலை கவலைக்கிடம்! மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!
கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த எஸ்.பி.பியின் உடல்நிலை கவலைக்கிடம்! மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!
பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் தனக்கு லேசான கொரோனா அறிகுறிகளே இருப்பதாகவும், குடும்பத்தாரின் நலன்கருதி தான் மருத்துவமனைக்கு வந்ததாகவும் அவரே கூறியிருந்தார்.
மேலும் மருத்துவமனை நிர்வாகமும் அவரது உடல் நலம் குறித்து நேற்று வெளியிட்டஅறிக்கையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ் பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவரை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருகிறது.
அவருக்கு ஆக்சிஜன் அளவு பராமரிக்கப்பட்டு வருகிறது என கூறியிருந்தனர்.
இந்நிலையில் எஸ்பி பாலசுப்ரமணியன் உடல்நிலை நேற்று இரவு மிகவும் மோசமடைந்து கவலைக்கிடமாக உள்ளது. அதனைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களின் அறிவுரையின்படி அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கைசுவாசம் பொருத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இதனை அறிந்த திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவர் நல்லபடி குணமடைந்து மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனைகள் மேற்கொண்டுவருகின்றனர்.