அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வின்னர் ரித்விகாதான்!. ஆனால் உண்மையிலே அதிர்ஷ்டசாலி இவர்தான்!.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வின்னர் ரித்விகாதான்!. ஆனால் உண்மையிலே அதிர்ஷ்டசாலி இவர்தான்!.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி சுற்றுக்கு முன்வரை உள்ளே இருந்தவர் தாடி பாலாஜி. இதனாலேயே அவர் அந்த நிகழ்ச்சியில் ஒரு லேடிஸ் ஹாஸ்டல் வார்டன் போலவே இருந்தார். தனி ஒருவன் போல பல பெண்களுடன் இருந்து விளையாடினார்.
பாலாஜி மற்றும் நித்யாவிற்கு இடையே கடந்த சில வருடங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். மேலும் இவர்களது மகள் போஷிகா தாய் நித்யாவுடன் வாழ்ந்து வந்தார்.
அவரின் மனைவி நித்யாவும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் வந்த சில வாரங்களிலேயே அவர் வெளியேறிவிட்டார். சண்டையால் பிரிந்திருந்தவர்கள் தற்போது ஒன்று சேர்ந்துவிட்டார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இதில் அவர்களின் மகளுக்கு போர்ஷிகாவுக்கு கமல் போன் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளாராம். அதை புகைப்படத்துடன் நித்யா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
It's ws indeed a pleasant surprise frm #Kamal Sir to Poshika!! She hd been longng fr tis !dinner_party wit nammavar..
— Nithya-Dheju S (@DhejuWE) 4 October 2018
tnx & luv frm Poshika pic.twitter.com/0z7pzFEHZC
இந்த நிகழ்ச்சியில் மூலம் பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் பாதி ஒன்று சேர்ந்துவிட்டனர். இவர்கள் முழுமையாக இணைந்துவிட்டால் இந்த நிகழ்ச்சியின் மூலம் உண்மையான அதிர்ஷ்டசாலி பாலாஜி தான் என ரசிகர்கள் கூறுகின்றனர்.