கண்ணீர் விட்டு கதறி அழுத அனுஷ்கா! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்! ஏன் தெரியுமா?

தமிழ் ,தெலுங்கு என பல மொழிகளிலும், அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து மாபெரும் பிரபலமாக இருப்பவர் நடிகை அனுஷ்கா.
மேலும் ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடித்து வந்த இவர், தற்போது கதாநாயகிகளுக்கு மிக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அவ்வாறு அவர் நடித்த அருந்ததி, பாகமதி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உருவானது.
இந்நிலையில் சினிமாத்துறையில் நடிகை அனுஷ்கா மாபெரும் இடத்தை பிடிக்க உறுதுணையாக இருந்த படம் அருந்ததி. இந்த படத்தின் இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
இவரது மறைவு சினிமா துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து பிரபலங்கள் பலரும் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகை அனுஷ்கா மறைந்த இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா உடலுக்கு அஞ்சலி செலுத்தி, கதறி அழுதுள்ளார்.இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.