அஜித்திற்காக அவரது மனைவி ஷாலினி செய்த செயல்.! வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி.!?
என்கிட்ட கொடுங்கம்மா, நான் எடுத்துட்டு வரேன்; குழந்தையுடன் தவித்த பெண்ணுக்கு உதவிய அஜித்..!
என்கிட்ட கொடுங்கம்மா, நான் எடுத்துட்டு வரேன்; குழந்தையுடன் தவித்த பெண்ணுக்கு உதவிய அஜித்..!
கோலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரத்தில் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித்குமார். இவர் எளிமையான குணம் கொண்டவர் என்பது பலரும் அறிந்த ஒன்று. அவர் தொலைதூர பயணங்களை மேற்கொள்ளும் போதும் தன்னால் இயன்ற உதவியை பலருக்கும் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் தனது பத்து மாத கைகுழந்தையோடு தனியாக வந்த பெண்மணிக்கு உதவி செய்த நடிகர் அஜித் அவரின் லக்கேஜ்ஜை தான் தூக்கிசென்று பத்திரமாக வழி அனுப்பிவைத்துள்ளார்.
மேலும் இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட நிலையில், இதனை பெண்ணின் கணவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த செயல் அஜித்தின் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.