4 நாட்கள் படப்பிடிப்புக்கு பின் நீக்கப்பட்டேன்! தேசிய விருது பெற்ற ரோஜா பட நடிகை மதுபாலா வேதனை!

4 நாட்கள் படப்பிடிப்புக்கு பின் நீக்கப்பட்டேன்! தேசிய விருது பெற்ற ரோஜா பட நடிகை மதுபாலா வேதனை!



actrress mathubala talk about her first film

மதுபாலா ஓர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மதுபாலா மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் இந்தித் திரைப்பட நடிகை மதுபாலாவின் நினைவாக பெற்றோர் இவருக்கு இந்தப்பெயர் சூட்டியதாக கூறப்படுகிறது.

நடிகை மதுபாலா 1992-ஆம் ஆண்டு மணிரத்னத்தின் தேசிய விருது பெற்ற ரோஜா படத்தில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். அதன்பிறகு, 1993 ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேன் படத்தில் படத்தில் நடித்து தமிழின் முன்னணி நடிகையானார். 

malavika

இந்த நிலையில் ’ரோஜா’ படத்திற்கு முன்பே தான் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் அந்த படத்தின் படப்பிடிப்பு நான்கு நாட்கள் நடந்த நிலையில், திடீரென அந்த படத்தில் இருந்து தான் நீக்கப்பட்டதாகவும், தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.ஆனால், திடீரென அப்படத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன் என்பதை செய்தித்தாள்களில் பார்த்துதான் தெரிந்துகொள்ள முடிந்தது.

தயாரிப்பு தரப்பிலிருந்து என்னிடம் ஒரு வார்த்தைக்கூட சொல்லவில்லை. ஒரு படத்தில் ஒப்பந்தமாகி வெளியேற்றப்பட்டால் வலி வேதனை என்ன என்பது அவரவர்களுக்குத்தான் தெரியும். இதன்பிறகு தான் கடினமாக உழைத்து முன்னணி நடிகையாக மாறியதாகவும் அதன் பின் தன்னை நீக்கிய தயாரிப்பாளரும் இயக்குனரும் வருத்தப்பட்டு இருப்பார்கள் என்று தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.