பச்சை வண்ண பைங்கிலி...புடவையில் பாக்க பளபளன்னு இருக்கும் நடிகை ஆத்மிகாவின் அழகிய புகைப்படம்!
பச்சை வண்ண பைங்கிலி...புடவையில் பாக்க பளபளன்னு இருக்கும் நடிகை ஆத்மிகாவின் அழகிய புகைப்படம்!

நடிகை ஆத்மிகாவின் பச்சை நிற புடவையில் உள்ள அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களூரில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தவர் ஆத்மிகா. நடிகையாகவேண்டும் என்ற ஆசையில் அந்த வேலையை விட்டுவிட்டு சினிமாதுறையில் களமிறங்கினார். பின்னர் தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இயக்கி ஹீரோவாக நடித்த மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடித்துள்ளார் ஆத்மிகா. சமீபத்தில் வெளியாகவேண்டிய இந்த படம் கொரோனா காரணத்தால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், புகைப்படங்கள் மற்றும் ஒர்கவுட் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது பச்சை வண்ண புடவையில் கியூட் சிரிப்புடன் உள்ள அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.