15 வயது சிறுமிக்கு பாலியல் தூஷ்பிரயோகம், கொலை மிரட்டல்.!! 30 வயது நபர் மீது போக்சோ வழக்கு.!!



15-year-old-girl-sexually-abused-and-threaten-to-dead-c

விழுப்புரம் மாவட்டத்தில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் அவருக்கு கொலை மிரட்டல் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக 30 வயது நபரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள சித்தேரிபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். 30 வயதான இவர் அப்பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதை வெளியே கூறினால் சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளார். எனினும் சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்.

tamilnadu

இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து விஜயகுமார் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மாணவியை பாலியல் வன்புணர்வு செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: "பாப்பா ட்ரெஸ்ஸ கழட்டி அங்கிள் ஏதோ செய்றாரு..." 8 வயது சிறுமி பலாத்காரம்.!! 44 வயது நபர் கைது.!!

இதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமியை கற்பழித்து விட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட விஜயகுமார் மீது தடுப்பு காவல் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: "உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்..." திருமண ஆசை காட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை.!! பெயிண்டர் அதிரடி கைது.!!