#அதிர்ச்சி : தங்கம் விலையில் மிகப்பெரிய சரிவு.?! ஆனந்த் ஸ்ரீனிவாசன் திட்டவட்டம்.!



​​​​​​​US Bond Yield Rise May Lead to Gold Price Fall Says Anand Srinivasan

USA பாண்ட் ஈல்ட் (Bond Yield) தொடர்ந்து அதிகரித்தால் தங்கத்தின் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,760க்கு விற்பனையாகி வரும் நிலையில், முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க அரசுப் பத்திரங்களின் ஈல்ட் அதிகரிப்பது முதலீட்டாளர்களை டாலர் மற்றும் பாண்ட் முதலீடுகளின் பக்கம் ஈர்க்கும். இதன் காரணமாக தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் குறையக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் விளக்குகின்றனர்.

பாண்ட் ஈல்ட் உயர்வுடன் டாலரின் மதிப்பும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. டாலர் வலுவாகும் சூழலில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அழுத்தத்துக்கு உள்ளாகி, எதிர்பாராத அளவில் குறையலாம் என ஆனந்த் ஸ்ரீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

Gold price

இருப்பினும் தங்கத்தின் விலை பல்வேறு சர்வதேச காரணிகளால் தீர்மானிக்கப்படுவதால், முதலீட்டாளர்கள் சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தங்கத்தில் முதலீடு செய்ய திட்டமிடுபவர்கள், உலக பொருளாதார சூழல், டாலர் மதிப்பு மற்றும் யூஎஸ் பாண்ட் ஈல்ட் மாற்றங்களை கவனிப்பது அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.