பட்டப்பகலில் நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக்கொல்லப்பட்ட வாலிபர்; பதைபதைக்கும் வீடியோ காட்சி!!

பட்டப்பகலில் நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக்கொல்லப்பட்ட வாலிபர்; பதைபதைக்கும் வீடியோ காட்சி!!



thelunkana---valiper---kolai-sampavam

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ராஜேந்திரன் நகரில் உள்ள அத்தாப்பூர் பகுதயில் இன்று நண்பகல் வாலிபர் ஒருவரை 4 பேர் கொண்ட ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. அந்த இடத்தில் ஏராளமான பொதுமக்கள் இருந்துள்ளார்கள் எனினும் கொலை கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் இருந்ததால் யாரும் அருகில் செல்லவில்லை மேலும் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த டிராபிக் போலீஸும் அருகில் நெருங்க முடியவில்லை. 

 தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் பெயர் ரமேஷ் என்பது தெரியவந்தது. மேலும் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றுக்காக சாட்சியாக ஆஜராகுவதற்கு சென்று கொண்டிருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.  எதற்காக கொலை செய்யப்பட்டார் கொலை செய்த கொலையாளிகள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பட்டப்பகலிலேயே போக்குவரத்து மற்றும்  பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கொலை நடந்துள்ளதால் தெலுங்கானா பகுதியில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.