செத்த பூனையுடன் 2 வருடமாக தூங்கும் இளம் பெண்: செல்ல பிராணியை பிரிய மனம் இல்லாமல் செய்யும் காரியத்த பாருங்க..!
செத்த பூனையுடன் 2 வருடமாக தூங்கும் இளம் பெண்: செல்ல பிராணியை பிரிய மனம் இல்லாமல் செய்யும் காரியத்த பாருங்க..!
பிரிட்டனில் 23 வயது பெண் இறந்துபோன அவரது செல்லப்பிராணியுடன் இரண்டு வருடங்களாக தூங்குகிறார்.
இங்கிலாந்து நகரமான போஸ்டனை சேர்ந்த சைலோ லீ எனும் 23 வயது பெண் அவரது இறந்துபோன செல்லப்பிராணியை பிரிய மனமில்லாததால், அதனை பதப்படுத்தி இரண்டு வருடங்களாக தன்னுடனே வைத்துக்கொண்டார். சைலோ லீ அவரது 6 வயதில் நிக்கி என்ற பூனையை வளர்க்க தொடங்கினார். 16 வருடங்கள் அந்த பூனை அவருடன் பாசமாக வளர்ந்தது. இந்நிலையில் 2020-வருடம் வயது மூப்பின் காரணமாக அந்த பூனை உயிரிழந்தது. குழந்தை பருவத்தில் இருந்து தன்னுடனே வளர்ந்து வந்த செல்லப்பிராணியை பிரிய மனமில்லாமலும் மேலும், அவரது நிக்கி புழுக்களுக்கு இரையாவதையும் அவர் விரும்பவில்லை.
எனவே, இறந்துபோன மிருகத் தோலுக்குள் துணி அல்லது பஞ்சு வைத்து அடைக்கும் முறையை பயன்படுத்தி உயிருடன் இருக்கும் மிருகத்தை போல வைத்துகொள்ளும் டாக்ஸிடெர்மியை, புத்தகங்கள் மற்றும் யூடியூப் வீடியோக்களில் இருந்து லீ கற்றுக்கொண்டு அவரே தனது பூனையை டாக்ஸிடெர்மி செய்து வீட்டில் இருக்கும் போது தன்னுடனே வைத்துள்ளார். மேலும், தூங்கும் போதும் நிக்கியை அவர் பிரிவதே இல்லை. இந்நிலையில் இரண்டு வருடங்களாக நிக்கி taxidermy செய்யப்பட்டு அவருடன் இருந்து வருகிறது.
இறந்த பிறகு 50 மணிநேரங்களுக்கு மேலாக தனது பூனையை முறையாக பதப்படுத்தி வைத்த பிறகு லீ அதனை stuffing செய்துள்ளார். விலங்குகளை நேசிப்பவரான சைலோ லீ இப்போது டாக்ஸிடெர்மியை முறையாக பயின்று வருகிறார்.