36,000 அடி உயரத்தில் நடந்தது என்ன? விமானத்தை தட்டிச் சென்ற மர்ம மோதல்! கண்ணாடி சிதறி பைலட் காயம்! அவசரமாக தரையிறக்கிய விமானம்....



unidentified-object-hits-boeing-737-max

விமானப் பாதுகாப்பு குறித்த உலகளாவிய விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், அமெரிக்காவில் நடைபெற்ற மர்மமான விமான சம்பவம் தற்போது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

டென்பரில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி புறப்பட்ட Boeing 737 Max 8 விமானம் 36,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கும்போது திடீரென கண்ணுக்குத் தெரியாத பொருள் (Unidentified Object) காக்பிட் விண்ட்ஷீல்டை கடுமையாக மோதியது. சில விநாடிகளில் கண்ணாடி சேதமடைந்தது, இதால் பைலட்டுகளும் பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கட்டுப்பாட்டை மீட்டெடுத்த விமானிகள், அவசர தரையிறக்கம் செய்து 134 பயணிகளின் உயிரை பாதுகாத்தனர்.

பைலட்டிற்கு காயம் – புகைப்படங்கள் வைரல்

இந்த சம்பவத்தில் இரண்டு விமானிகளுள் ஒருவருக்கு கைகள் பகுதியில் காயம் ஏற்பட்டது. காக்பிட்டில் உடைந்த கண்ணாடி மற்றும் டாஷ்போர்டில் சிதறிய கண்ணாடித் துண்டுகள் உள்ளிட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன. 2025 அக்டோபர் 16-ம் தேதி வியாழக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து United Airlines இதுவரை நிலை விளக்கமளிக்கவில்லை.

இதையும் படிங்க: நடுரோட்டில் ஆக்ரோஷமாக மாறிய யானை! காரைப் முட்டி கவிழ்த்து பந்தாடிய தருணம்! பகீர் வீடியோ....

FAA விசாரணை தீவிரம்

இந்த மர்ம மோதலுக்கான காரணம் குறித்து மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் (FAA) தீவிரமாக விசாரித்து வருகிறது. பொதுவாக பறவைகள் அல்லது ஆலங்கட்டி மழை குறைந்த உயரத்தில் விமானங்களைத் தாக்கக்கூடும் என்றாலும், 36,000 அடி உயரத்தில் நடந்த இந்த தாக்குதல் முற்றிலும் அபூர்வமானதாக இருப்பதால், அது விண்வெளிச் சிதில் அல்லது தொழில்நுட்ப கோளாறு என ஆராயப்படுகிறது.

இந்த சம்பவம் எதிர்கால விமானப் பாதுகாப்புத் திட்டங்களில் புதிய எச்சரிக்கை சிக்னலாக பார்க்கப்பட வேண்டிய ஒன்றாக நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: ஓடுபாதையில் மோதிக்கொண்ட இரண்டு விமானங்கள்! உடைந்து விழுந்த விமானத்தின் இறக்கை! வைரலாகும் பரபரப்பு வீடியோ....