பிரான்சில் பயங்கரம்.. ஆசனவாயிலில் வெடிகுண்டுடன் வந்த ஆசாமி... அலறியடித்து ஓடிய மக்கள்..!

பிரான்சில் பயங்கரம்.. ஆசனவாயிலில் வெடிகுண்டுடன் வந்த ஆசாமி... அலறியடித்து ஓடிய மக்கள்..!



terror-in-france-assailant-came-with-a-bomb-in-the-anus

பிரான்சில் கடந்த சனிக்கிழமை Toulon நகரில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு மர்ம நபர் ஒருவர் தனது ஆசனவாயில் வெடிகுண்டுடன் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதனையடுத்து அந்த நபர் தனது ஆசனவாயில் ஒரு பொருளை நுழைத்ததாகவும் அது திரும்ப எடுக்க முடியாமல் தவிப்பதாகவும் கூறவே அதனை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த பொருளைக் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த பொருள் என்னவென்றால் பிரெஞ்சு ராணுவம் முதல் உலகப் போரின் போது பயன்படுத்திய ஒரு வெடிகுண்டு ஆகும்.

இதனைக்கண்டு பதறிப் போன மருத்துவர்கள் உடனே போலீசாருக்கு தகவல்  தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு உள் நோயாளிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்பு அறுவைசிகிச்சை நிபுணர் உதவியுடன் அந்த மர்ம நபரின் அடிவயிறு கிழிக்கப்பட்டு வெடிகுண்டானது பாதுகாப்பாக வெளியே எடுக்கப்பட்டது. இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.