BREAKING: குடிமகன்களுக்கு ஷாக் நியூஷ்! தமிழகத்தில் 4 நாள்கள் டாஸ்மாக் விடுமுறை..... ஹோட்டலில் பார்களும் மூடப்படும்!!!
தமிழ்நாட்டில் தேர்தல் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் அமைதியான முறையில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமானதாக, டாஸ்மாக் கடைகள் மூடல் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு பெரும் கவனம் பெற்றுள்ளது.
தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் மது விற்பனை தடை
தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களை முன்னிட்டு, மொத்தம் நான்கு நாட்களுக்கு அனைத்து டாஸ்மாக் கடைகளும் மற்றும் ஹோட்டல்களில் உள்ள பார்களும் மூடப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, ஏப்ரல் 21, 22 மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 23 ஆகிய நாட்களில் மது விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4 ஆம் தேதியும் இதே தடை அமலில் இருக்கும்.
இதையும் படிங்க: மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவிப்பு! தமிழக அரசு வெளியிட்ட முழு லிஸ்ட் பட்டியல்...!
விதிமீறினால் கடும் நடவடிக்கை
இந்த உத்தரவை மீறி ரகசியமாக மது விற்பனை செய்தாலோ அல்லது விதிகளை மீறினாலோ, தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
சமூக ஒழுங்கையும், தேர்தல் நேரத்தின் அமைதியையும் பாதுகாக்க இந்த நடவடிக்கை முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே பொதுமக்கள் இந்த விதிகளை கடைப்பிடித்து, பொறுப்புடன் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்பது அதிகாரிகளின் வலியுறுத்தலாகும்.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்.....பறக்கும் படைகள்! தமிழக தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய அறிவிப்பு!!!