மாரி செல்வராஜின் 'வாழை' பட சிறுவனின் +2 mark வைரல்.! நடிப்பிலும் படிப்பிலும் அசத்திய பொன்வேல்.!
பார்க்கும்போதே புல்லரிக்குது..... உள்ளங்கையில் விஷப்பாம்பிற்கு தண்ணீர் கொடுத்த நபர்! பாம்பு குடிக்கிறத பாருங்க... திக் திக் நிமிட வீடியோ..!!!
மிகவும் விஷத்தன்மை கொண்ட பாம்பிற்கு ஒருவர் தனது உள்ளங்கையில் நீர் தேக்கி குடிக்க வைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பாம்பின் அருகில் கூட செல்ல அச்சப்படும் சூழலில், எந்த தயக்கமும் இன்றி அந்த நபர் நடந்துகொண்ட விதம் இணையவாசிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது. குறிப்பாக, பாம்பும் அமைதியாக அவரிடம் இருந்து நீர் குடிக்கும் காட்சி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விஷப்பாம்புடன் அசாதாரண நெருக்கம்
வைரலாகும் அந்த வீடியோவில், நபர் ஒருவர் தனது உள்ளங்கையில் சிறிதளவு நீரை தேக்கி, பாம்பின் வாயருகே மெதுவாக கொண்டு செல்கிறார். தாக்கும் இயல்புடையதாக கருதப்படும் அந்த பாம்பும் எந்தவித ஆக்ரோஷமும் காட்டாமல், அமைதியாக நீரை குடிக்கிறது.
இதையும் படிங்க: கடி கடி... நல்லா கடி! பாம்பை கடிக்க விட்டு வேடிக்கை பார்த்த நபர்! அதுல விளக்கம் வேற... பகீர் வீடியோ!
பொதுவாக மக்கள் பயந்து விலகிச் செல்லும் சூழலில், அந்த நபர் மிகுந்த நம்பிக்கையுடன் செயல்பட்டது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊர்வன பயிற்சியாளர் என தகவல்
தகவலின்படி, இந்த செயலில் ஈடுபட்டவர் அமெரிக்காவின் தென் கரோலினாவைச் சேர்ந்த ஊர்வன பயிற்சியாளர் என கூறப்படுகிறது. அவர் நடத்தும் “லிபர்ட்டி செர்பென்டேரியம்” அமைப்பின் மூலம் ஆபத்தான பாம்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோவில் காணப்படும் பாம்பு ரைனோ வைப்பர் அல்லது கபூன் வைப்பர் இனத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த வகை பாம்புகளின் விஷம் மிகவும் வீரியமானது. மனித உடலுக்குள் சென்றால் சில நிமிடங்களிலேயே கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
நெட்டிசன்களின் கலவையான எதிர்வினை
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ பல லட்சம் பார்வைகளை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த பலர் அந்த நபரின் துணிச்சலை பாராட்டியுள்ள நிலையில், சிலர் இதை மிகவும் ஆபத்தான செயல் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
“ஒரு சிறிய தவறு நடந்தாலும் உயிருக்கு ஆபத்தாக முடியும்” என்று சிலர் எச்சரித்துள்ளனர். அதே நேரத்தில், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான நம்பிக்கையை இந்த வீடியோ வெளிப்படுத்துவதாகவும் பலர் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், முறையான பயிற்சி இல்லாதவர்கள் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடி ஆத்தீ....இது தான் நிஜமான பரமபத விளையாட்டு... பாம்புகளே காய்களாக, பெண்ணே பகடையாக... கொத்த வரும் நிஜ பாம்பு! திக் திக் திகில் வீடியோ..!!!