பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...! மாணவர்களுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட பெண் ஆசிரியர்கள்..!

பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...! மாணவர்களுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட பெண் ஆசிரியர்கள்..!



Shocking incident at school...! Female teachers engaged in fun with students..!

அமெரிக்காவில் கடந்த இரண்டு நாட்களில் மாணவர்களுடன் உல்லாசத்தில் ஈடுபட்டதாக கூறி 6 பெண் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள டான்வில்லியைச் சேர்ந்த எலன் ஷெல்(38) என்ற ஆசிரியை மீது கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆசிரியை ஷெல், 16 வயதான இரண்டு சிறுவர்களுடன் மூன்று முறை உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆர்கன்சாஸ் கல்வியாளர் ஹீதர் ஹேர் (32) அவர் ஒரு டீன் ஏஜ் மாணவருடன் பாலியல் உறவில் இருந்ததாக ஆர்கன்சாஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஓக்லஹோமாவைச் சேர்ந்த எமிலி ஹான்காக் (26) என்பவர் கைது செய்யப்பட்டார், அவர் ஒரு மாணவருடன் உறவில் ஈடுபட்டதாகக் அக்கம்பக்கத்தினர் மூலம் உள்ளூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததால் கைது செய்யப்பட்டார்.

லிங்கன் கவுண்டியில் இருக்கும் ஒரு ஆசிரியை, 15 வயது மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதாக கோகோ கூறியுள்ளது. ஆசிரியரான எம்மா டெலானி ஹான்காக், வெல்ஸ்டன் பப்ளிக் ஸ்கூலில் வேலை செய்து வந்துள்ளார், இவர் மாணவருடன் பள்ளி கட்டிடத்திற்குள் உல்லாசமாக இருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

நியூயார்க் போஸ்ட் படி, அயோவாவின் டெஸ் மொயின்ஸில் இருக்கும் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியரான கிறிஸ்டன் காண்ட்(36), ஒரு டீன் ஏஜ் மாணவருடன் தனது பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் ஐந்து முறை உடலுறவு கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களில் அமெரிக்காவில் மாணவர்களை கட்டாயப்படுத்தி ஆசிரியர்கள் உடலுறவு கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.