கண்ணை மறைத்த காமவெறியால் கணவனின் படுக்கை அறையில் அரங்கேறிய கொடூரம்! 11 மாதங்களுக்குப் பின் அண்ணனைத் தேடிய தம்பிக்கு அடுக்கடுக்காக காத்திருந்த அதிர்ச்சி!!!



navi-mumbai-wife-lover-murder-arrest

நவிமும்பை ஐரோலி பகுதியில் கணவரை கொலை செய்து உடலை துண்டாக்கி மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட மனைவியும், அவரது காதலனும் 11 மாதங்களுக்குப் பிறகு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குடும்பத்தினரின் சந்தேகத்தைத் தொடர்ந்து தொடங்கிய விசாரணை, அதிர்ச்சிகரமான கொலை உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

கள்ளக்காதலைத் தொடர்ந்து தீட்டப்பட்ட திட்டம்

போலீஸ் தகவலின்படி, 50 வயதான பலிராம் சூர்யநாத் குஷ்வாகா, தனது மனைவி சுனிதாவுக்கும் ஆட்டோ ஓட்டுநரான ராகுல் தஷ்ரத் பிரஜாபதிக்கும் இடையிலான கள்ளக்காதல் தொடர்பை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: பெட்ரூமில் பிருந்தா தேவியுடன் கணவனை அந்தக்கோலத்தில் பார்த்த மனைவி! தலைக்கேறிய வெறியால் நடந்த தகராறு.... தோட்டத்தில் புதைக்கப்பட்ட பிணம்.. அடுத்தடுத்து நடந்த பயங்கரம்..!!!

கடந்த 2025 ஆகஸ்ட் 9-ஆம் தேதி இரவு, குழந்தைகளை உறவினர் வீட்டுக்கு அனுப்பிவைத்த சுனிதா, கணவர் தூங்கியபோது காதலனை வீட்டுக்குள் வரவழைத்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து பலிராமின் கழுத்தை நெரித்து, கத்தியால் அறுத்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

உடலை துண்டாக்கி காட்டுப்பகுதியில் வீசிய குற்றச்சாட்டு

கொலைக்குப் பிறகு ஆதாரங்களை மறைக்கும் நோக்கில், உடலை மூன்று துண்டுகளாக வெட்டி தனித்தனி சாக்கு மூட்டைகளில் கட்டி காட்டுப்பகுதியில் வீசியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின், வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு சுனிதா குழந்தைகளுடன் வேறு பகுதிக்கு குடிபெயர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

சகோதரரின் சந்தேகத்தால் வெளிவந்த உண்மை

கடந்த ஏப்ரல் மாதம் பலிராமின் சகோதரர் அவரைத் தேடி வந்தபோது, சுனிதா அளித்த பதில்களில் முரண்பாடு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அவர் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணை தீவிரமடைந்தது.

விசாரணையின் போது இருவரும் செல்போன்கள் மற்றும் சிம் கார்டுகளை அடிக்கடி மாற்றி தலைமறைவாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும், போலீசாரின் தீவிர விசாரணையில் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 11 மாதங்களாக மறைந்திருந்த இந்த வழக்கின் உண்மை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 

இதையும் படிங்க: அடுத்தவனுடன் அந்த கோலத்தில் மனைவியை கண்ட கணவன்! அடுத்து வலையில் சிக்கிய மகளும்....இறுதியில் 2 பேரும் திட்டம் போட்டு தீர்த்துகட்டிய கொடுமை...!!!