விஜய் டிவி ராசித்தா ரசிகரா நீங்க!!! குட்டி உடையில் கியூடான புகைப்படம் உங்களுக்காக!
தன் குட்டியை காப்பாற்ற கரடியும் புலியும் நேருக்கு நேர் சண்டையிடும் காட்சி! கடைசியில் யார் வெற்றி பெற்றதுனு பாருங்க! வைரலாகும் காணொளி..

அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, விலங்குகளின் தாய்ப்பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக பலரது கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது. இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தின் நல்லமலா மலைத்தொடரில் உள்ள வனப்பகுதியில் நிகழ்ந்தது.
கரடியின் தாய்பாசம்
பசுமை மற்றும் பல்லுயிர் வளமிக்க இந்த வனப்பகுதியில், ஒரு கரடி புதிதாக ஒரு குட்டியை ஈன்றுள்ளது. அந்த குட்டியுடன் தாய் கரடி அமைதியாக இருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு புலி அந்த குட்டியை தூக்கி செல்ல முற்பட்டது.
இதனை கண்ட தாய் கரடி, தன்னுடைய குட்டியை காப்பாற்ற வேகமாக விரைந்து, புலியுடன் நேருக்கு நேர் சண்டையில் இறங்கியது. தாயாகிய கரடி தனது குட்டிக்காக எந்த அச்சத்தையும் பொருட்படுத்தாமல், வீரம் கொஞ்சமுமின்றி போராடியது.
இதையும் படிங்க: படுக்கையில் தனது காலில் ஊர்ந்து சென்ற கருப்பு ராஜாநாகத்தை வீடியோ எடுத்த நபர்! அடுத்து நடந்தது என்ன? திகில் காணொளி....
இந்த அதிர்ச்சி சம்பவத்தை அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த வனத்துறை அலுவலர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
பலரும் இந்த வீடியோவைப் பார்த்து, “தாய்ப்பாசத்தை மிஞ்சிய வீரம் உண்டோ?” என்று கேட்டு, மனிதர்களை போலவே விலங்குகளுக்கும் தாய்ப்பாசம் உள்ளது என்பதை நம்பமுடிகிறது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது போன்ற சம்பவங்கள், விலங்குகளின் உணர்வுகளையும், இயற்கையின் அதிசயங்களையும் நமக்கு நினைவுபடுத்துகிறது.
పెద్దపులిని ఓడించి.. తన బిడ్డను కాపాడుకున్న ఎలుగుబంటి
— Telugu Scribe (@TeluguScribe) May 21, 2025
నల్లమల అడవుల్లో ఎలుగుబంటి, పెద్దపులి ఫైట్
ఎలుగుబంటి పిల్లపై దాడికి దిగబోయిన పెద్దపులి
ఎలుగుబంటి తిరగబడడంతో అడవిలోకి పరుగులు పెట్టిన పెద్దపులి pic.twitter.com/vaITSIob2T
இதையும் படிங்க: மாமியாரின் மாஸ்டர் பிளானால் பரிதாபமாக இறந்த மருமகள்! காரணம் என்ன? அதிர்ச்சி சம்பவம்...