காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
வீட்டில் செல்லப்பிராணியாக வளர்த்த சிங்கம்! சுவர் ஏறி குதித்து குழந்தையை விரட்டி விரட்டி தாக்கிய காட்சி! ரசித்து சிரித்து பார்த்த உரிமையாளர்! பதறவைக்கும் வீடியோ..

பாகிஸ்தானின் லாஹூர் நகரத்தில் ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட 11 மாத ஆண் சிங்கம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது, சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 3-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில், அந்த சிங்கம் சுவர் மீது ஏறி தெருவில் இருந்த பெண் மற்றும் குழந்தைகள் மீது திடீரென பாய்ந்தது. இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, பலரது கவலையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலில் சிலர் காயமடைந்துள்ளனர். அதைவிட வேதனையான விஷயம் என்னவென்றால், சிங்கத்தை வளர்த்து வந்த வீட்டார் அந்தக் காட்சியை சிரித்து பார்த்தனர் என கூறப்படுகிறது. ஒரு பாதிக்கப்பட்ட நபரின் தந்தை, “எங்கள் குழந்தைகள் மீது சிங்கம் பாய்ந்தது, ஆனால் அவர்கள் சிரித்துக்கொண்டே பார்த்தனர்” என்றார்.
போலீசார் சிங்கத்தை பறிமுதல் செய்தனர்
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு போலீசார் விரைந்து செயல்பட்டு, சிங்கத்தை பறிமுதல் செய்து லாஹூரில் உள்ள வனவிலங்கு பூங்காவிற்கு மாற்றினர்.
சமூக வலையில் பொதுமக்களின் கோரிக்கை
இத்தகைய ஆபத்தான விலங்குகளை வீட்டில் வளர்ப்பது பொதுமக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய அபாயம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்க, சிங்கங்கள், புலிகள் போன்ற விலங்குகளை வளர்ப்பதை தடையிடும் சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகின்றது.
---
WATCH: Lion escapes in Pakistan’s Lahore, attacks woman and children pic.twitter.com/iSr1k60a92
— Insider Paper (@TheInsiderPaper) July 4, 2025
In Pakistan, a man was detained by wildlife authorities after his pet lion escaped in Lahore, injuring at least three people in a residential area. All victims are now in stable condition. pic.twitter.com/4XADzqeGlp
— Volcaholic 🌋 (@volcaholic1) July 4, 2025
இதையும் படிங்க: இலங்கை கிரிக்கட் மைதானத்தில் திடீரென நுழைந்த பாம்பு! அதிர்ச்சியை ஏற்படுத்திய தருணம்...