தோழிக்கு கொடுத்த உணவை வேறொருவர் சாப்பிட்டதால் ஆத்திரம்; நண்பர் சரமாரியாக சுட்டுக்கொலை.!

தோழிக்கு கொடுத்த உணவை வேறொருவர் சாப்பிட்டதால் ஆத்திரம்; நண்பர் சரமாரியாக சுட்டுக்கொலை.!



in Pakistan Man Killed his friend 

 

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சியில் வசித்து வருபவர் டேனியல். இவரின் பெண் தோழி ஷாஜியா. டேனியலுக்கு அலி கேரியோ என்ற நண்பரும் இருக்கிறார். 

சம்பவத்தன்று டேனியல் தனது பெண் தோழி ஷாஜியாவை சாப்பிட அழைத்து இருக்கிறார். அங்கு அலி கேரியோவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, அவரும் வந்துள்ளார். 

இந்நிலையில், தனது தோழி ஷாஜியாவுக்கு டேனியல் ஆசையாக பர்கர் பரிமாற, அதனை அலி கேரியா சிறிதளவு வெட்டி எடுத்து சாப்பிட்டுள்ளார். 

இது டேனியலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தவே, அவர் தனது நண்பரை கண்டித்து இருக்கிறார். அச்சமயம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இடத்தில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற டேனியல் நண்பர் அலியை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். 

நிலைகுலைந்துபோன அலி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்ட்டதும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், அலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். டேனியல் கைது செய்யப்பட்டார்.