முதல்முறையாக.... பாராளுமன்றத்தில் தனது மகனுக்கு தாய்ப்பால் கொடுத்த எம்பி.! வாழ்த்துக்களை கரகோசமாக தெரிவித்த சக எம்பிக்கள்.!!

முதல்முறையாக.... பாராளுமன்றத்தில் தனது மகனுக்கு தாய்ப்பால் கொடுத்த எம்பி.! வாழ்த்துக்களை கரகோசமாக தெரிவித்த சக எம்பிக்கள்.!!



in-itay-parliment-a-woman-mp-breastfeed-her-son-for-the

இத்தாலியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது மகனுக்கு  பாராளுமன்றத்தில் வைத்து  தாய்ப்பால் புகட்டிய சம்பவம் நாடெங்கிலும் வரவேற்பை பெற்றிருக்கிறது . சக பாராளுமன்ற உறுப்பினர்களும்  அந்தப் பெண்  எம்பி யும் அவரது மகனையும் வாழ்த்தினர்.

இத்தாலி நாட்டைச் சார்ந்த  கில்டா ஸ்போர்ட்ஹலோ. இவர் அங்குள்ள நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார்‌. இந்நிலையில் தனது மகனை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வந்த இவர்  அவருக்கு நாடாளுமன்ற சேம்பரில் வைத்து   தாய்ப்பால் கொடுத்தார்.

taly

இத்தாலி பாராளுமன்றத்தில் இது போன்ற நிகழ்வு நடப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு அவரது சக பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை வாழ்த்தி பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும் அவரது மகனையும் அவர்கள் வாழ்த்தினர்.

இத்தாலி பாராளுமன்ற குழு கடந்த நவம்பர் மாதம் அதன் பெண் உறுப்பினர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாராளுமன்ற சேம்பரில் வைத்து தாய்ப்பால் புகட்டலாம் என சட்டம் இயற்றியது. மேலும் தற்போது தாய்ப்பால் புகட்டிய கில்டா தான் அந்த சட்டம் ஏற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.