5 கால்களுடன் பிறந்த கன்றுக்குட்டி! உடலில் ஒளிந்துள்ள அதிஷ்ட நம்பர்.... திருவிழா போல் திரண்டு போய் பார்த்த மக்கள் கூட்டம்!!!
தாய்லாந்தின் சுகோத்தாய் மாகாணத்தில் உள்ள ஒரு விவசாயி வீட்டில், ஐந்து கால்களுடன் பிறந்த கன்றுக்குட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரிதான பிறப்பை காண சுற்றுப்புற கிராமங்களிலிருந்தே மக்கள் தொடர்ந்து திரண்டு வருகின்றனர். இரண்டு மாதங்களாகவே இந்த கன்று அங்கு பேசுபொருளாக மாறியுள்ளது.
அதிர்ஷ்டத்தின் அடையாளமா?
வழக்கத்திற்கு மாறாக பிறந்த இந்த கன்றை பலர் அதிர்ஷ்டத்தின் அடையாளம் எனக் கருதி வருகின்றனர். உள்ளூர் நம்பிக்கையின்படி, இப்படியான விலங்கு பிறப்புகள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை கொண்டுவரும் என்று கருதப்படுகிறது. இதனால், கன்றின் பிறந்த தேதி, அதன் உடலில் உள்ள அடையாளங்கள் போன்றவற்றை வைத்து லாட்டரி எண்களை கணிக்க முயற்சியும் நடக்கிறது.
கிராமமே திருவிழா சூழல்
கன்றை பார்க்க தினமும் ஏராளமானோர் வருகை தருவதால், அந்த பகுதி சிறிய சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. சிலர் பூஜைகள் செய்து, கன்றைத் தொட்டு ஆசீர்வாதம் பெறுகின்றனர். சமூக வலைதளங்களில் இந்த செய்தி பரவியதும், கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: நம்பவே முடியல! பாம்பின் தலையில் இருக்கும் நாகமணி! வெவ்வேறு கோணங்களில் ஜொலிக்கும் ரத்தினம்! வைரலாகும் வீடியோ.....
மருத்துவ விளக்கம் என்ன?
இந்த நிகழ்வுக்கு மருத்துவர்கள் வேறொரு விளக்கம் அளிக்கின்றனர். இது Polymelia எனப்படும் ஒரு மரபணு குறைபாடு என்று அவர்கள் கூறுகின்றனர். கருவில் வளர்ச்சியின் போது ஏற்படும் மாற்றங்களால் கூடுதல் உறுப்புகள் உருவாகும் நிலைதான் இதற்கு காரணம். இதற்கு அதிர்ஷ்டம் அல்லது அமானுஷ்யம் தொடர்பில்லை என்றும் நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.
அறிவியல் ரீதியில் இது ஒரு உடல்நலக் கோளாறு என்றாலும், பொதுமக்களின் பார்வையில் இது இன்னும் ஒரு அதிசயமாகவே உள்ளது. அந்த வகையில், இந்த கன்றுக்குட்டி தற்போது அந்த பகுதியின் கவன ஈர்ப்பான ‘சிறிய பிரபலமாக’ மாறியுள்ளது.
இதையும் படிங்க: நம்பவே முடியல... பிறந்த கொஞ்ச நேரத்துலயே கையை ஊன்றி உட்கார்ந்த குழந்தை! அதிர்ச்சியில் உறைந்து போன நர்ஸ்.... தீயாய் பரவும் வீடியோ!!!