ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி.! ரயில் மோதலில் இருந்து தப்பித்த குடும்பம்.! வைரல் வீடியோ.

ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி.! ரயில் மோதலில் இருந்து தப்பித்த குடும்பம்.! வைரல் வீடியோ.



Family escaped from train accident video goes viral

ரயில் தண்டவாளத்தில் நின்று புகைப்படம் எடுக்கும்போது திடீரென ரயில் வந்ததில் ஒரு குடும்பமே அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் பென்சைல்வானியா பகுதியில் இருக்கும் பிராங்க்ளின் கவுண்டி என்ற இடத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பலர், தங்கள் குழந்தைகளுடன் போட்டோ எடுத்துக்கொண்டும், விளையாண்டுகொண்டும் இருந்துள்ளனர்.

சற்று நேரத்தில் தமக்கு நேர இருக்கும் விபத்து குறித்து அறியாத அந்த குடும்பம் புகைப்படம் எடுப்பதிலையே ஆர்வமாக இருந்தது. அநேரம் பார்த்து ஆக்வேக ரயில் ஓன்று அந்த தண்டவாளத்தில் வர, எதேச்சையாக ரயில் வருவதை பார்த்த ஒரு பெண் கூச்சலிடுகிறார்.

உடனே அங்கிருந்தவர்கள் குழந்தைகளை தூக்கி கொண்டு அங்கும் இங்கும் ஓடுகின்றனர். அத்ரிஷ்டவசமாக யாரும் ரயிலில் சிக்கவில்லை. இந்த காட்சி அங்கிருந்த கேமிரா ஒன்றில் பதிவாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.