மகள்களை சீரழிக்க வந்த கயவனை கொன்று, மரத்தில் தொங்கவிட்ட தாய்; பதறவைக்கும் சம்பவம்.!
கொரோனா தாக்கி குணமடைந்த நபரிடமிருந்து மீண்டும் கொரோனா தொற்று பரவுமா?
கொரோனா தாக்கி குணமடைந்த நபரிடமிருந்து மீண்டும் கொரோனா தொற்று பரவுமா?
ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறுகிய நாட்களிலேயே குணமடைந்து வீடு திரும்பினாலும் அவர் குறைந்தது 2 வாரங்களாவது தனிமையில் இருக்க வேண்டும் என்று ஆய்வில் கூறப்படுகிறது.
அதாவது கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் ஆரம்ப அறிகுறிகளிலேயே குணமடைந்தவர் எனில் மீண்டும் அவர் மூலம் கொரோனா தொற்று ஏற்ப்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகிவுள்ளன.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரின் இரத்த மாதிரிகளை ஆய்வு செய்த போது அதில் குணமடைந்த பாதி பேருக்கு குணமடைந்த பிறகும் கூட கொரோனாவின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஐந்து அல்லது எட்டு நாட்களிலேயே குணமடைந்தவர் குறைந்தது 2 வாரங்களாவது தன்னை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.