மூன்றே நாட்களில் உயிரைப்பறிக்கும் புதிய வைரஸ்.. ஆய்வுக்காக சீனாவில் உருவாக்கப்பட்ட கிருமி?.!



China scientists have created a new virus

 

கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கி மக்களை வாட்டி வதைத்த கொரோனா தொற்று பரவலில் இருந்து நாம் விடுபட்டதாக நினைத்தாலும், உலக சுகாதார அமைப்பு பல கட்டமாக கொரோனா உருமாறும் என தெரிவித்திருந்தது.

புதிய வைரஸ்

சீனாவின் உஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கொரோனா உருவாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு இருந்த நிலையில், கொரோனா போன்ற புதிய வைரஸ் தற்போது சீனாவில் இருந்து உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கூடைப்பந்தில் வாயில் விறல் வைக்கவைத்த சீன சிறார்களின் பயிற்சித்திறன்; அட்டகாசமான வீடியோ இதோ.! 

எபோலாவின் மூலம் புதிய வைரஸ்

சீனாவின் ஹெபெல் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எபோலா வைரஸின் சில பகுதிகளை பயன்படுத்தி ஒரு புதிய வைரஸை வடிவமைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

Ebola virus

மூன்று நாட்களில் பறிபோகும் உயிர்

நோய் தொடர்பான சில ஆய்வுக்காக இக்கிருமி உருவாக்கப்பட்டதாகவும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட இந்த வைரஸ் மூன்று நாட்களில் உயிரை பறிக்ககூடும் என்றும் கூறப்படுகிறது. 

புதிய அச்சுறுத்தல்

மேலும் ஆய்வகத்தில் பயன்படுத்தப்பட்ட வெள்ளெலிகளை இந்த வைரஸ் மூன்று நாட்களுக்குள் கொன்றதாகவும், சீனாவில் இருந்து உருவாகியுள்ள இந்த புதிய வைரஸ் புதிய அச்சுறுத்தலாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தேன் கூட்டில் நடந்த டிஸ்கோ டான்ஸ்; வியக்கவைக்கும் அதிர்ச்சி உண்மை.. நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.!