வெறும் 24 மணி நேரத்தில் நடந்த அதிசயம்! 3 வருஷத்துக்கு அப்புறம் வந்தாலும் அந்த பெண்ணின் கெத்து குறையல....!!!
சமூக ஊடகங்களில் சில நாட்கள் காணாமல் போனாலே ரசிகர்கள் மறந்துவிடுவார்கள் என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சீனாவின் பிரபல இன்ஃப்ளூயன்சர் ஜியாங் செங்லான். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் எந்தப் பதிவும் இல்லாமல் இருந்த அவர், தற்போது புதிய கணக்குடன் மீண்டும் வந்திருக்கிறார். அதுவும் வெறும் 24 மணி நேரத்தில் 1 கோடி ஃபாலோவர்களை குவித்து இணைய உலகையே ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகை
கடந்த 2023 மே மாதத்திற்குப் பிறகு சமூக ஊடகங்களில் எந்தப் புதிய வீடியோவும் வெளியிடாமல் இருந்த ஜியாங் செங்லான், மே 13 அன்று தனது உண்மையான பெயரில் புதிய கணக்கைத் தொடங்கினார். அவர் வெளியிட்ட முதல் மேக்கப் வீடியோவே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
அந்த வீடியோ குறுகிய நேரத்திலேயே 4.4 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்று வைரலானது. முன்னதாக ‘செங்ஷியன்’ என்ற பெயரில் 30 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களுடன் அவர் பிரபல சேனல் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: BREAKING: இரவு முழுவதும் கொடுத்த அழுத்தம்.... வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஓபிஎஸ்! தமிழக அரசியலில் புதிய விவாதத்தால் பரபரப்பு!!!
மறைவுக்குப் பின்னால் இருந்த காரணம்
திடீரென சமூக ஊடகங்களில் இருந்து விலகியதற்கான காரணத்தையும் ஜியாங் தனது புதிய வீடியோவில் பகிர்ந்துள்ளார். தகவலின்படி, முன்னாள் நிறுவனத்துடன் ஏற்பட்ட கடுமையான பிரச்சினை காரணமாகவே அவர் இணையத்திலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும், பழைய பெயரின் உரிமை அந்த நிறுவனத்திற்குச் சொந்தமானதால், அதை முழுமையாக விட்டுவிட்டு புதிய அடையாளத்துடன் மீண்டும் வர முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.
ரசிகர்களுக்கு முக்கிய எச்சரிக்கை
பழைய பெயரில் இன்னும் விற்கப்படும் பொருட்கள் அல்லது ஆன்லைன் கடைகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்றும் ஜியாங் எச்சரித்துள்ளார். இனி சமூக ஊடகம் சார்ந்த அழகு குறிப்புகள் மட்டுமல்லாமல், மோட்டிவேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் வீடியோக்களையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், நீண்ட இடைவெளிக்குப் பிறகும் ஜியாங் செங்லானின் ரசிகர் வட்டாரம் குறையவில்லை என்பது தெளிவாகியுள்ளது.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்.... திடீர் ட்விஸ்ட்! கூட்டணி இல்லை..... ராமதாஸ் அறிவிப்பால் பரபரப்பில் அரசியல் கலம் !!!