குழந்தை கவனிப்பில் பெற்றோர்களே கவனம்; நொடியில் நடந்த பகீர் சம்பவம்.. இறுதியில் ட்விஸ்ட்.!

குழந்தை கவனிப்பில் பெற்றோர்களே கவனம்; நொடியில் நடந்த பகீர் சம்பவம்.. இறுதியில் ட்விஸ்ட்.!



Baby Carrying Awareness Video 

 

இன்றளவில் செல்போனை கையில் வைத்துக்கொண்டு, உற்றுப்பார்த்தபடியே வலம்வரும் நபர்கள் ஏராளம். 

இதனால் நமது உலகத்தையும் மறந்து, நாம் செயல்பட்டு வருகிறோம். ஒருசிலர் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் செல்போனில் யாரிடமாவது பேசுவது, அதனை வைத்து வீடியோ பார்ப்பது என இருந்து வருகின்றனர். 

இந்த நிலையில், பெண்மணி ஒருவர் தனது அக்காவின் குழந்தையுடன் இருந்த நிலையில், குழந்தையை தொட்டிலில் வைத்து ஆட்டி கொண்டு இருந்தார். 

அப்போது, அங்கு வந்த ஒரு நபர், குழந்தையை தூக்கி செல்வது போல தூக்கிச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அவரை பதற வைத்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், குழந்தை கவனிப்பில் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.