குழந்தை பிறந்து 40 நாள்தான் ஆகுது.! தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.! இதுதான் காரணமா??

குழந்தை பிறந்து 40 நாள்தான் ஆகுது.! தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.! இதுதான் காரணமா??


young-mother-commits-suicide-after-40-days-giving-birth

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ்நகர் தெருவில் வசித்து வருபவர் இஸ்மாயில். இவரது மகள் 24 வயது நிறைந்த ஆஷா. இவர் பிபிஏ பட்டதாரி. இந்நிலையில் ஆஷாவிற்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு புழல் சக்திவேல் நகரில் வசித்து வரும் அமீன் பாஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

அமீன் பாஷா அம்பத்தூரில் கார்களுக்கு பாலிஷ் போடும் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கர்ப்பமடைந்த ஆஷாவிற்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தனது குழந்தையுடன் ஆஷா தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். ஆஷாவுக்கு கடந்த சில காலங்களாகவே சரிவர தாய்ப்பால் சுரக்கவில்லை எனவும், அதனால் குழந்தைக்கு ஒழுங்காக பால் கொடுக்க முடியவில்லையே என அவர் மிகுந்த வருத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

suicide

இந்நிலையில் ஆஷா வீட்டின் சமையலறையில் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத விரக்தியிலேயே அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் ஆஷாவின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.