நண்பன் இறந்த துக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்.!

நண்பன் இறந்த துக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்.!



young-man-suicide-for-his-friend-death

திருவள்ளூர் அருகே உள்ள கோட்டைமாநகர் பகுதியை சேர்ந்த மில்டன் என்ற வாலிபர் பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடன் 11-ஆம் வகுப்பு முதல் ஒன்றாக படித்து வந்த அரக்கோணம் அடுத்துள்ள புளியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அவரது நண்பன் உதயகுமார் கடந்த மாதம் 5-ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், நண்பன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் மில்டன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நண்பனின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனையடுத்து பெற்றோர்கள் மில்டனை சமாதானம் செய்து வந்தனர். 

இந்த நிலையில் நாள்தோறும் தனது உயிர் நண்பனின் இறப்பை நினைத்து விரக்தியில் இருந்து வந்த மில்டன், தனது நண்பன் இறந்து போன அதே 5-ஆம் தேதி அன்றே தானும் இறக்க முடிவு செய்து புதன்கிழமை அதிகாலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மில்டனை மீட்டு  மருத்துவவமனைக்கு கொண்டு சென்று சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே மில்டன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.