காதலனை கட்டிப்போட்டு கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்கள்.! காதலன் எடுத்த விபரீத முடிவு.!

காதலனை கட்டிப்போட்டு கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்கள்.! காதலன் எடுத்த விபரீத முடிவு.!


young girl abused in viruthunagar

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியிலான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி தனது காதலன் ஹரிகிருஷ்ணனுடன் ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த  3 பேர் ஹரிகிருஷ்ணனை கட்டிப்போட்டுவிட்டு அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும், ஹரிகிருஷ்ணன் மற்றும் அவரது காதலியிடம் இருந்து நகை, பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து தனது காதலி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால் மனமுடைந்த ஹரிகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, ஹரிகிருஷ்ணனை மீது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட 3 கொடூர குற்றவாளிகளையும் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.