கார் பிரேக் வயரை கட் செய்தது யார்! நீங்களா.. மரண பயத்தில் ரோகிணி..! சிறகடிக்க ஆசை புரோமோ.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா...? என்ன கொடுமை இது...!

திருப்பூர் செல்லம் நகரை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சித்ரா அந்தப் பகுதியில் இயங்கி வரும் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். சித்ரா பொதுவாக சமூக வலைதளத்தில் மிகவும் ஆர்வமாக இருந்து வந்துள்ளார்.
இவர் டிக் டாக்கில் வீடியோ பதிவிடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். பின்பு டிக் டாக் தடை செய்யப்பட்ட பின் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் வீடியோ பதிவிடுவதில் சித்ரா அதிக ஆர்வம் காட்டியுள்ளார். இதனை அவரது கணவர் அமிர்தலிங்கம் கண்டித்துள்ளார்.
ஆனால் அதற்கெல்லாம் மறுப்பு தெரிவித்த மனைவி சித்ரா தனது டிக் டாக் நண்பர்களுடன் சேர்ந்து சினிமாவில் நடிப்பதற்காக சென்னை சென்றுள்ளார். அமிர்தலிங்கம் எதிர்ப்பையும் மீறி சென்னை சென்று சில மாதங்கள் அங்கிருந்துள்ளார் சித்ரா.
பின்னர் சில நாட்கள் கழித்து சென்னையில் இருந்து வீடு திரும்பிய சித்ராவிற்கும் அவரது கணவர் அமிர்தலிங்கத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சித்ரா கோபித்துக் கொண்டு தனது மகள்களை அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதனை அறிந்த உறவினர்கள் சித்ராவையும் அவரது மகள்களையும் சமாதானப்படுத்தி மீண்டும் தனது கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் காலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததை அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது கழுத்தில் காயங்களுடன் சித்ரா சடலமாக கிடந்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் சித்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அமிர்தலிங்கத்தை கைது செய்து கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.