தனது காதல் கணவனை, திருமணம் முடிந்த 3 வாரங்களிலேயே துடிதுடிக்க எரித்துக் கொன்ற மனைவி.! வெளியான பகீர் காரணம்!!

தனது காதல் கணவனை, திருமணம் முடிந்த 3 வாரங்களிலேயே துடிதுடிக்க எரித்துக் கொன்ற மனைவி.! வெளியான பகீர் காரணம்!!



wife-killed-husband-in-3-week-after-marriage

திண்டிவனம் பகுதியில் வசித்து வந்தவர் சேதுபதி. 24 வயது நிறைந்த இவர் பஞ்சர் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேதுபதி முருகவேணி என்ற 19 வயது இளம் பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக அவரை திருமணம் செய்து கொண்டு குடிசை வீட்டில் ஒன்றில் இருவரும் வசித்து வந்துள்ளனர் 

இந்நிலையில் நேற்று மாலை சேதுபதியின் வீடு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. 
 மேலும் வீட்டின் உள்ளே உறங்கிக்கொண்டிருந்த சேதுபதி தீப்பற்றி அலறிக்கொண்டு இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வேகமாக விரைந்து வீட்டில் எறிந்த தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதற்குள் தீ வீடுமுழுவதும் பரவி, சேதுபதியும் உடல் கருகி உயிரிழந்தார்.

mariage

 இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டின் வெளியில் தாழ்ப்பாள் போடப்பட்டு இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் எவ்வித காயமும் இன்றி முருகவேணி வீட்டின் வெளிப்பகுதியில் இருந்தது அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 இதனை தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட  நிலையில் அவர் அதிர்ச்சி அளிக்கும் வாக்குமூலம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் கூறியதாவது திருமணம் முடிந்த நாளிலிருந்து தங்களுக்குள் சண்டை ஏற்பட்டு வருகிறது. மேலும் வேலைக்குச் செல்லாமல் சேதுபதி வீட்டில் இருந்துகொண்டே தனது நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் குடித்துவிட்டு அடித்து,சண்டை போட்டார். இதனால் மனம் வெறுத்துப்போய் நேற்று அவர் தூங்கிக் கொண்டிருந்த போது அவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துவிட்டு வெளியே வந்து தாழ்பாள் போட்டதாக கூறியுள்ளார்.

mariage

இதனைத் தொடர்ந்து முருகவேணி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து உள்ளனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.