வேலைக்காக வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்ற நண்பன்.! இளைஞனின் கேவலமான காரியத்தால் மனைவி செய்த தரமான சம்பவம்!!
வேலைக்காக வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்ற நண்பன்.! இளைஞனின் கேவலமான காரியத்தால் மனைவி செய்த தரமான சம்பவம்!!
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் கபீர் அகமத். அவரது நண்பர் இர்பான் அகமத்.கபீர் கத்தார் நாட்டில் பணிபுரிந்து வந்தநிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய குடும்பத்தாருடன் அங்கு குடிபெயர்ந்தார்.
இந்நிலையில் திருமணமாகி வேலை எதுவும் இல்லாமல் பெரும் அவதிப்பட்டு வந்த இர்பான் தனது கஷ்டங்களை கூறி கபீர் அகமதுவிடம் வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். இந்நிலையில் அவரது நிலையை கேட்ட கபீர் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக அவரை கத்தார் நாட்டிற்கு அழைத்துச் சென்று தனது குடியிருப்பிலேயே தங்க வைத்துள்ளார். மேலும் அவருக்கு தீவிரமாக வேலையும் தேடி வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் இருந்த இர்பான், கபீரின் மனைவியிடம் ஆசை வார்த்தை கூறி தகாத முறையில் நடக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து கபீரின் மனைவி வருத்தத்துடன் அவரது கணவரிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து வெளியே தெரிந்தால் பெரும் பிரச்சினையாகிவிடும் என எண்ணிய கபீர் அமைதியாக இர்பான் மற்றும் தனது குடும்பத்தினரை அழைத்து கொண்டு வாணியம்பாடி புறப்பட்டார்.இந்நிலையில் திடீரென தனது நண்பனின் செயல் மீது சந்தேகம் அடைந்த இர்பான் இந்தியா வந்ததும் விமான நிலையத்திலிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.
இதனை தொடர்ந்து வீட்டிற்குச் சென்ற கபீர், இர்பானின் மனைவி மற்றும் ஊர் தலைவர்களிடம் அவர் செய்தவற்றை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு பிறகு வீடு திரும்பிய இர்பானை அவரது உறவினர்கள் கபீரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கபீர் அவரை கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் இர்பானின் மனைவி அவரை செருப்பால் அடித்துள்ளார். இதனை வீடியோ எடுத்த கபீர் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.இதனை தொடர்ந்து இர்பான் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.