என்ன கொடுமை இது.! சொத்தை எழுதி தரக்கோரி தாத்தாவின் கை, கால்களை உடைத்து துன்புறுத்தும் பேரன்கள்.. கள்ளக்குறிச்சி அருகே பயங்கரம்..!

என்ன கொடுமை இது.! சொத்தை எழுதி தரக்கோரி தாத்தாவின் கை, கால்களை உடைத்து துன்புறுத்தும் பேரன்கள்.. கள்ளக்குறிச்சி அருகே பயங்கரம்..!



what a cruelty.! Grandsons who broke the arm and legs of the grandfather after writing off the property.. Terrible near Kallakurichi..!

கள்ளக்குறிச்சி அருகே குதிரைசந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் சடையன் - லட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு மகன் ஒருவர் உள்ளார். அவருக்கு  திருமணமாகி 2 மகன்கள் உள்ள நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சடையனின் மகன் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தந்தை உயிரிழந்ததை அடுத்து அவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை தங்களது பெயரில் எழுதி வைக்க கோரி மருமகள் பெரியநாயகமும் பேரன்கள் சதீஷ் மற்றும் தமிழரசன் ஆகியோர் சடையனின் கை, கால்களை உடைத்து துன்புறுத்தி உள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த சடையன் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இதுவரை உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வருகிறார். மேலும் இதுகுறித்து கச்சிராபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சடையன் மற்றும் லட்சுமி தம்பதியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.