#சற்றுமுன்: சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பெண்களுக்கு கொரோனா... உஷார் நிலையில் அதிகாரிகள்.!
#சற்றுமுன்: சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பெண்களுக்கு கொரோனா... உஷார் நிலையில் அதிகாரிகள்.!
விருதுநகர் மாவட்டம், இலந்தைகுளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரின் மனைவி பிரதீபா. சுப்பிரமணியம் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சீனாவில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். சுப்பிரமணியத்திற்கு ஜெர்மனியில் வேலை கிடைத்துவிட்டதால், அவர் அங்கிருந்தவாறு ஜெர்மனிக்கு சென்றுவிட்டார்.
இதனால் பிரதீபா தனது மகள் பிரக்தியாவுடன் சீனாவில் இருந்து இலங்கை வழியே மதுரை விமான நிலையத்திற்கு வந்து வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த விபரம் சுகாதாரத்துறையினருக்கு தெரியவரவே, அவர்கள் தாய்-மகளுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.
அப்போது, இவர்களுக்கு கொரோனா பரிசோதனை இருப்பது உறுதியாகவே, விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இருவருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.