பகுத்தறிவு பிள்ளைக்கு பிறந்தநாள்... கலைஞர் கருணாநிதி பிறந்தநாளுக்கு கவிஞர் வைரமுத்துவின் வேற லெவல் கவிதை.!

பகுத்தறிவு பிள்ளைக்கு பிறந்தநாள்... கலைஞர் கருணாநிதி பிறந்தநாளுக்கு கவிஞர் வைரமுத்துவின் வேற லெவல் கவிதை.!


vairamuthu-tweet-about-kalaingar-birthday


தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98 ஆவது பிறந்தநாளையொட்டி தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கொரோனா தொற்று காரணமாக கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். 

மேலும், கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு பல மக்கள் நலத் திட்டங்களை முதலமைச்சர் இன்று துவக்கி வைக்க உள்ளார். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து, சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு கவிதை மூலமாக மேலும் அவரது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ஜூன் 3 ஆம் தேதி என்பது, தமிழுக்கு ஏடு திறந்த நாள் என்றும் பகுத்தறிவுக்குப் பிள்ளை பிறந்த நாள் என்றும் வைரமுத்து கூறியுள்ளார்.


கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு கவிஞர் வைரமுத்துவின் கவிதை:
ஜூன் 3
கலைஞர் பிறந்தநாள்

தமிழுக்கு
ஏடு திறந்தநாள்
தமிழர்க்குச்
சூடு பிறந்தநாள்

பகுத்தறிவுக்குப்
பிள்ளை பிறந்தநாள்
பழைமை லோகம்
தள்ளிக் களைந்தநாள்

மேடை மொழிக்கு
மீசை முளைத்தநாள்
வெள்ளித் திரையில்
வீரம் விளைத்தநாள்

வள்ளுவ அய்யனை
வையம் அறிந்தநாள்
வைரமுத்துவின்
ஆசான் பிறந்தநாள்