கார் பிரேக் வயரை கட் செய்தது யார்! நீங்களா.. மரண பயத்தில் ரோகிணி..! சிறகடிக்க ஆசை புரோமோ.
கோவையில் அதிர்ச்சி சம்பவம்.. திமுக பென்ஸ் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு.!

கோவை மாவட்டத்தில் திமுக பெண் கவுன்சிலரை அறிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டி அவ்வை நகரில் வசித்து வருபவர் சித்ரா. இவர் திமுக மூன்றாவது வார்டு கவுன்சிலராக உள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவரது வீட்டிற்குள் புகுந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், சித்ரா அவரது கணவர் ரவிக்குமார் மற்றும் மகன் மோகன் இருவரையும் அறிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதனிடையே சித்ரா கத்தி கூச்சலிட சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் கிடந்த மூன்று பேரையும் விட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அரிவாலால் வெட்டிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.