"யூனிஃபார்மை கழட்டி வச்சிட்டு வந்து பாரு..." காவலரை ஒருமையில் மிரட்டிய போதை ஆசாமிகள்... பாய்ந்த வழக்கு.!



two-drunken-people-arrested-for-abusing-a-patrol-office

தஞ்சாவூரில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலரை மது போதையில் தரக்குறைவாக பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்த இரண்டு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம் ஆயுதப்படை காவலர் காட்டு ராஜா நேற்று இரவு வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தினார். காரை ஓட்டிய நபர் நிப்பாட்டாமல் சென்று இருக்கிறார். இதுகுறித்து காவலர் காரை நிப்பாட்ட சொன்னால் நிப்பாட்ட மாட்டீர்களா என காட்டு ராஜா கேட்டிருக்கிறார். அதற்கு வண்டியில் இருந்து இறங்கி வந்த இரண்டு போதை ஆசாமிகள் காவலரை கடுமையான வார்த்தைகளால் திட்டி இருக்கின்றனர்.

tamilnadu

மேலும் செந்தில் பாலாஜி பத்து ரூபாய் அதிகமாக இருக்கிறாரே எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர். நீ எவ்வளவு சம்பளம் வாங்குகிறாய் தெரியுமா? நாங்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறோம் எனவும் அவரை பார்த்து  கேட்டுள்ளனர். மேலும் நீ அரசாங்க அதிகார திமிரில் பேசுகிறாய் உன்னுடைய யூனிபார்மை கழற்றி வைத்துவிட்டு வா பார்ப்போம் என்று கொலை மிரட்டல் கொடுக்கும் தோணியிலும் பேசியதோடு  காவலரை ஆபாசமான வார்த்தைகளால் கடுமையாக திட்டி உள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில்  தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் காவலர் காட்டு ராஜா. அந்த புகாரின் பேரில் விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் சந்திரா சேவப்பநாயக்கன்வாரிப் பகுதியில் கேட்டரிங் சென்டர் நடத்தி வரும் ஹரிதாஸ் (44)  மற்றும் அவரது நண்பர் காரல் மார்க்ஸ்(44)  ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.