பெண் காவலருடன் துணை சூப்பிரண்டு உல்லாசம்; அந்தரங்க போட்டோ லீக்.. முதல்வர் வரை பரபரப்பு மனு.!

பெண் காவலருடன் துணை சூப்பிரண்டு உல்லாசம்; அந்தரங்க போட்டோ லீக்.. முதல்வர் வரை பரபரப்பு மனு.!



Trichy Lady Cop Letter to CM

 

திருச்சி மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வரும் பெண் அதிகாரி, தமிழ்நாடு முதல்வர் அலுவலகம், மாநில மனித உரிமைகள் ஆணையம், மத்திய மண்டலா ஐ.ஜி உட்பட பல அரசுத்துறை அலுவலகத்திற்கு புகார் மனுவை அனுப்பி வைத்துள்ளார். அந்த மனுவில், "திருச்சி மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வந்த காவல்துறை துணை சூப்பிரண்டு, பெண்ணுடன் உல்லாசமாக இருந்த அந்தரங்க புகைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் காவல்துறையினரின் வாட்சப் குழுவில் வைரலானது.

trichy

அதனைத்தொடர்ந்து, சில நொடிகளுக்கு உள்ளாகவே வாட்சப் போட்டோ குழுவில் இருந்து அகற்றப்பட்டது. இந்த போட்டோ எப்படியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிவிட்டது. இது தற்போது வரை வைரலாகி வரும் நிலையில், இந்த விஷயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் உயர் அதிகாரி மீது உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித பலனும் இல்லை. தற்போது வரை விசாரணை கூட நடத்தப்படவில்லை.

trichy

இந்த சர்ச்சையில் சிக்கிய துணை சூப்பிரண்டு, பல பெண் காவல் அதிகாரிகளுக்கு தவறான எண்ணத்தில் ஆபாச படங்களை அனுப்பி இருக்கிறார். இவர் சில முக்கிய பிரமுகர்களின் நேரடி மற்றும் மறைமுக ஆதரவு காரணமாக தனது மீது நடவடிக்கை எடுக்கப்படவிடாமல் கவனமுடன் பார்த்துக்கொள்கிறார். அவரின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.