அடக்கொடுமையே!! திருமணத்திற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்.. பரிதாபமாக பெண் பலியான சம்பவம்..!

அடக்கொடுமையே!! திருமணத்திற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்.. பரிதாபமாக பெண் பலியான சம்பவம்..!



Tragedy happened to those who went to the wedding.. Tragically the woman died..!

குமரி மாவட்டம் வேர்கிளம்பி அருகே திருமண மண்டபத்தில் கழிவறை செப்டிக் டேங்க் உடைந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதலார் பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் - சுஜிஜா தம்பதியினர் ஓட்டுலிவிலையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். அப்போது அவர்கள் மண்டபத்தின் பக்கவாட்டு பகுதி வழியாக நடந்து சென்ற போது திடீரென யாரும் எதிர்பாராத விதமாக கழிவறை செப்டிக் டேங்க் உடைந்து விழுந்ததில் தம்பதி இருவரும் உள்ளே விழுந்தனர்.

Wedding function

இதனையடுத்து உடனடியாக தக்கலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கவே அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் செப்டிக் டேங்கில் விழுந்த மோகன்தாஸ் மற்றும் சுஜிஜாவை மீட்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். மேலும் இந்த இடுப்பாடுகளில் சிக்கிய சுஜிஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், அவரது கணவர் மோகன்தாஸ் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.