காதலனுடன் உல்லாசம் அனுபவித்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்: போலீசார் விசாரணை..!

காதலனுடன் உல்லாசம் அனுபவித்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்: போலீசார் விசாரணை..!



Tragedy befell a young woman who was having fun with her boyfriend

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள நிமினி வயல் பகுதியைச் சேர்ந்தவர் தேவன். கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு சரஸ்வதி, பிரியா (21) என்ற 2 மகள்களும், லோகேஷ் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் பிரியா வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இதன் காரணமாக, அவருக்கு கர்ப்பம் உண்டாகி 7 மாதங்கள் ஆகியுள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் காலையில் பிரியா இறந்து விட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் அருள் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து சென்று பிரியாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும்விசாரணையில் அவரது மரணத்தில் மர்மம் இருப்பது தெரியவந்தது.

இதன் பின்னர் பிரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து பிரியாவின் பெற்றோர், உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், வாலிபருடன் நெருங்கி பழகியதால் பிரியா 7 மாத கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது. திருமணம் ஆகாத நிலையில் கர்ப்பமாக இருப்பது  வெளியில் தெரிந்தால் அவமானம் எனக்கருதி வீட்டிலேயே பிரசவம் பார்த்ததும் தெரியவந்தது.

மேலும் பிரசவத்தில் அதிக ரத்தபோக்கின் காரணமாக பிரியா உயிரிழந்ததும், அவரது வயிற்றில் இருந்த 7 மாத சிசுவை வீட்டின் அருகே நிலத்தில் தோண்டி புதைத்ததும் தெரிய வந்தது. இதற்கிடையே நேற்று மாலை பிரியாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் பின்னர் கூடலூர் தாசில்தார் சித்தராஜ் முன்னிலையில் உதவி காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையிலான காவல்தூறையினர் புதைக்கப்பட்ட சிசுவின் உடலை தோண்டி எடுத்தனர்.

பின்னர் அந்த சிசுவின் உடலை, பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கூடலூர் காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.