92 காலி பணியிடங்கள்.! விண்ணப்பிக்க இதுதான் கடைசி நாள்.! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

92 காலி பணியிடங்கள்.! விண்ணப்பிக்க இதுதான் கடைசி நாள்.! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!



tnpsc-group-1-exam-announced

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர், வணிக வரித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர்,  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 1 தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://tnpsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 27 முதல் 29-ம் தேதி வரை விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் சரி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

tnpsc

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 30ந் தேதி குரூப் 1 முதல் நிலைத் தேர்வு நடைபெறும் எனவும் முதன்மை தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.