BREAKING: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகிறது! வெளியான அதிரடி அறிவிப்பு.!!!



tn-plus-two-results-release-tomorrow

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்பார்ப்பு நாளை நிறைவேறுகிறது. 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

தகவலின்படி, தேர்வு முடிவுகள் வெளியான உடனேயே மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை இணையதளத்தில் சரிபார்க்க வசதி செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: BREAKING: பிளஸ் -2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அரசுத் தேர்வுகள் இயக்கம்..!!!

எஸ்எம்எஸ் மூலமும் தேர்வு முடிவு

மாணவர்களுக்கு உடனடி தகவல் கிடைக்கும்படி, பள்ளிக் கல்வித்துறையில் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி மூலம் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அனுப்பப்பட உள்ளன. இதனால் இணையதள நெரிசலை தவிர்த்து விரைவாக முடிவுகளை தெரிந்துகொள்ள முடியும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதன்பின், மாணவர்கள் தங்களது பள்ளிகளிலும் மதிப்பெண் விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் எப்படி பார்க்கலாம்?

மாணவர்கள் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in வழியாக முடிவுகளை பார்க்கலாம். இதற்காக பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்ய வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் அதிகாலை முதலே மாணவர்கள் இணையதளங்களை பயன்படுத்தத் தொடங்குவார்கள் என்பதால், தொழில்நுட்ப குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதையும் படிங்க: BREAKING! மாணவர்களே.... பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே-8 ஆம் தேதி வெளியாகாது! அதிரடி காரணத்தால் கல்விவித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!