கார் பிரேக் வயரை கட் செய்தது யார்! நீங்களா.. மரண பயத்தில் ரோகிணி..! சிறகடிக்க ஆசை புரோமோ.
தமிழக அரசு பணியாளர்களின் ஓய்வு பெரும் வயது வரம்பு திடீர் அதிகரிப்பு.! தமிழக அரசு அதிரடி உத்தரவு.!

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயது 58 இல் இருந்து 59 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இன்று வெளியான அறிவிப்பில், தமிழக அரசு பணியாளர்களின் ஓய்வு பெரும் வயதை 58 இல் இருந்து 59 ஆக உயர்த்தப்படுவதாகவும், இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருத்தும் என அரசு அறிவித்துள்ளது.
மேலும், தமிழக அரசின் இந்த ஆணை இன்றில் இருந்தே உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.