# சற்று முன் : ஹாப்பி நியூஷ்....மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.2,500 குறித்து அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன முக்கிய தகவல்...!!!



tn-finance-minister-response-rs2500-maghalir-urimai-tho

தமிழகப் பெண்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து முதலமைச்சர் விஜய் சரியான நேரத்தில் தகுந்த முடிவை எடுப்பார் என்று தமிழக நிதியமைச்சர் K.A.S. தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசின் தற்போதைய முன்னுரிமைகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.

புதிய அரசு பொறுப்பேற்று இன்னும் குறுகிய காலமே ஆன நிலையில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பணிகளில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: குட் நியூஷ்! விரைவில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. நாளை வங்கி கணக்கில் வரும் பணம்! முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!!!

ரூ.2,500 உரிமைத்தொகை குறித்து பதில்

செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர், மகளிர் உரிமைத்தொகை உயர்வு தொடர்பாக முதலமைச்சர் விஜய் சரியான நேரத்தில் முடிவெடுப்பார் என்று குறிப்பிட்டார். இதனால், திட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் மீண்டும் அதிகரித்துள்ளது.

அதேசமயம், திட்டத்தின் அமலாக்கம், நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய பயனாளிகள் சேர்க்கை போன்ற விஷயங்களில் அரசு இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை.

பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பில் கவனம்

தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு பல்வேறு நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்துவது ஆகியவை அரசின் முக்கிய இலக்காக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்காக பல துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும், மாவட்ட அளவிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

அதிமுக அமைச்சர்கள் குறித்து மவுனம்

இதன் பின்னர், புதிய அமைச்சரவையில் அதிமுக சார்பிலானவர்கள் இடம்பெறுவார்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அந்த அரசியல் கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் நிதியமைச்சர் தவிர்த்துவிட்டார்.

இதனால், தற்போதைய அரசியல் சூழலில் கூட்டணி மற்றும் அமைச்சரவை மாற்றம் தொடர்பான விவாதங்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.

 

இதையும் படிங்க: உச்சக்கட்ட எதிர்பார்பில் மக்கள்! மகளிர் உரிமைத்தொகையில் தமிழக அரசு அதிரடி மாற்றம்.! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு.!!!