3 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழப்பு.. தந்தை கண்முன் சோகம்..!

3 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழப்பு.. தந்தை கண்முன் சோகம்..!



thuraiyur-road-accident-small-boy-death

தந்தையின் கண் முன்னே 3 வயது சிறுவன், லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி அம்மாபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சுரேஷ் (வயது 35). இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி (வயது 32). தம்பதிகளுக்கு மூன்று வயதில்  லித்திஸ் என்ற ஆண் குழந்தையும், ஒரு கைக்குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில், நேற்று காலை சுரேஷ் தனது மகனை காளிப்பட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சேலம் பொட்டியாபுரம் கிராமத்திலிருந்து, அம்மாபாட்டி கிராமத்திற்கு செங்கல் ஏற்றி வந்த லாரியின், பின் சக்கரத்தில் சுரேஷ் நிலைதடுமாறி தனது மகனுடன் கீழே விழுந்தார்.

trichy

இந்த விபத்தில் லித்திஸ் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் விபத்து வழக்குப்பதிந்து சிறுவனின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், லாரி டிரைவரான 50 வயதுடைய சேட்டு என்பவரையும் விசாரணை செய்து வருகின்றனர். அத்துடன் 3 வயது சிறுவன் தனது தந்தையின் கண்முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.