#Breaking: தூத்துக்குடி மாவட்டத்தில் நாளையும் பள்ளி-கல்லூரிகளில் விடுமுறை அறிவிப்பு: மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!

#Breaking: தூத்துக்குடி மாவட்டத்தில் நாளையும் பள்ளி-கல்லூரிகளில் விடுமுறை அறிவிப்பு: மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!



Thoothukudi District 20 Dec 2023 Rain Holiday 

 

இலங்கையை ஒட்டி நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடத்த 3 நாட்களாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கனமழை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை புரட்டிப்போட்டது. 

பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போனது. வெள்ளத்தின்பிடியில் தவித்த மக்கள் பேரிடர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டு வருகின்றனர். மக்களுக்கு தேவையான உணவுகள் ஹெலிகாப்டர் உதவியுடன் பாதிக்கப்பட்ட இடங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து, அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.