கிணற்றில் கவிழ்ந்த டிராக்டர்!.. பலியான இளைஞர்!.. பயிர்களை பாதுகாத்தவருக்கு நேர்ந்த சோகம்..!

கிணற்றில் கவிழ்ந்த டிராக்டர்!.. பலியான இளைஞர்!.. பயிர்களை பாதுகாத்தவருக்கு நேர்ந்த சோகம்..!



The youth died after the tractor overturned in the well

திருச்சி மாவட்டம், பாடாலூர் அருகேயுள்ள ஊட்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவர் ஒரு விவசாயி. இவரது மகன் சதிஷ் (21). இவர் தனது குடும்பத்திற்கு சொந்தமான விவசாய நிலத்தை உழுவதற்காக நேற்று தனது உறவினருக்கு சொந்தமான டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார்.

வழியில் இருந்த விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய் செடிகள் சேதமடையாமல் இருக்க டிராக்டரை சாலையோரம் ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த கிணற்றில் டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்தது. அந்த பகுதியிலுள்ள விவசாய நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் இந்த விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்தநர்.

மேலும், விபத்து குறித்து சிறுகனுர் தீயணைப்பு நிலையம் மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் கிணற்றில் விழுந்த டிராக்டரை கிரேன் இயந்திரத்தின் உதவியுடன் கிணற்றில் இருந்து எடுத்தனர். பின்னர் கிணற்றில் இறங்கி தேடிய தீயணைப்பு வீரர்கள் சதீஷை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர்.

இதனை தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய சிறுகனூர் காவல்துறையினர், திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 21 வயது இளைஞர் டிராக்டருடன் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஊட்டத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.